மேலும்

Archives

இந்தியப் பெருங்கடலை அமைதி வலயமாக பேண சிறிலங்கா வலியுறுத்தல்

மாறிவரும் உலகளாவிய பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில், இந்தியப் பெருங்கடலை அமைதி, ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட செழிப்புக்கான ஒரு வலயமாக பேணுவதன் முக்கியத்துவத்தை சிறிலங்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ரஷ்ய பாதுகாப்புச் சபையின் பிரதி செயலாளருடன் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் சந்திப்பு

ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர், எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, ரஷ்ய பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளரும், ரஷ்ய கூட்டமைப்பின் அரச ஆலோசகருமான அலெக்சாண்டர் நிகோலாயெவிச் வெனடிக்டோவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ரஷ்ய பிரதிப் பாதுகாப்பு அமைச்சருடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பேச்சு

ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த  மொஸ்கோவில்  இன்று ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சர் வாசிலி ஒஸ்மாகோவை (Vasily Osmakov) சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பலாலி காணிகள் விடுவிப்பு குறித்த தீர்மானமின்றி திரும்பினார் பாதுகாப்பு பிரதி அமைச்சர்

சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர இன்று, யாழ்ப்பாணம், பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள,  விடுவிக்கப்படாத பிரதேசங்களில் கள ஆய்வு ஒன்றை  மேற்கொண்டுள்ளார்.

வடக்கில் சிறிலங்கா காவல்துறையை வலுப்படுத்த 134  வாகனங்களை வழங்கியது இந்தியா

வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக, இந்தியா 134  கப் வாகனங்களை கொடையாக வழங்கியுள்ளது.

அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி சிறிலங்காவில் பேச்சு

அமெரிக்க இராணுவத்தின்  பசிபிக் பிராந்தியத்திற்கான, மூலோபாய மற்றும் திட்டங்களுக்கான பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் கில்ஸ் ஜே.எஸ். கொர்னேலியா தலைமையிலான உயர்மட்டக் குழுவினர்,  இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டங்கள் குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் குழு சிறிலங்கா பயணம்

அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு ஆளுகை நிறுவனத்தின் (ISG) பிரதிநிதிகள் குழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சிறிலங்காவில் இந்திய விமானப்படைத் தளபதி

இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதி எயர்  சீவ் மார்ஷல் அமர் பிரீத் சிங், சிறிலங்காவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ  பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அனைத்துலக பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

சிறிலங்காவில் அனைத்துலக பங்களிப்புடன் கூடிய வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு, அனைத்துலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் எலைன் பியர்ஸன் (elaine pearson) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – சிங்கள ராவய எதிர்ப்புப் போராட்டம்

இறுதிக்கட்ட போரின் போது படுகொலை செய்யப்பட்ட மக்களை  நினைவுகூரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு,  கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று மாலை இடம்பெற்றது.