பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த சிறிலங்கா- பாகிஸ்தான் உறுதி.
ஐந்தாவது, பாகிஸ்தான்-சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல், நேற்று நிறைவுக்கு வந்துள்ளது. இந்தக் கலந்துரையாடல், ஏப்ரல் 28ஆம் திகதி முதல், 30ஆம் திகதி வரை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்பு செயலர் லெப்டினன்ட் ஜெனரல் முகமட் அலியும், சிறிலங்கா பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தவும், பேச்சுக்களில் பங்கேற்ற இருதரப்பு குழுக்களுக்கும் தலைமை தாங்கினர்.
இந்தக் கலந்துரையாடலின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் தற்போதைய நிலையை மீளாய்வு செய்துடன், இதன் கீழ் அடைந்த முன்னேற்றம் குறித்தும் திருப்தி வெளியிட்டுள்ளனர்.
பிராந்திய பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால்கள் குறித்தும், இரு நாடுகளின் பாதுகாப்புச் செயலர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
ஒருவருக்கொருவர் உதவுவதற்கும் ஆதரவளிப்பதற்கும் தங்கள் உறுதியைக் வெளிப்படுத்தியுள்ளனர்.
இருதரப்பு உறவுகளின் நேர்மறையான பாதை குறித்து இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்ததுடன், அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதியை மீளவும், உறுதிப்படுத்தியுள்ளனர்.