மேலும்

சிறிலங்கா அடுத்த கடன் தவணைக்கு காத்திருக்க நேரிடும்- ஐஎம்எவ்

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணையைப் பெற, சிறிலங்கா சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என, சர்வதேச நாணய நிதியத்தின், சிறிலங்காவுக்கு கடன் வழங்கும் குழுவின் தலைமை அதிகாரி இவான் பபஜெர்ஜியோ தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் முக்கிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாததால், அடுத்த கடன் தவணைக்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

நான்காவது மீளாய்வுக்கான அதிகாரிகள் மட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் ஒப்புதலைப் பெறுவதற்கு, இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றும், அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *