கோத்தாவைச் சந்தித்தார் யசூஷி அகாஷி
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, ஜப்பானின் மூத்த இராஜதந்திரியும், ஐ.நாவின் மூத்த பிரதிநிதியுமான, யசூஷி அகாஷி சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
கொழும்பில் நேற்றுக்காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான எந்த தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்கத் தலைவர்களையும் யசூஷி அகாஷி சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.