மைத்திரி – மகிந்த இந்தவாரம் சந்திப்பு
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கள் இந்தவாரம் நடைபெறவுள்ளன.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இந்த தகவலை வெளியிட்டார்.
“சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் நடந்த சந்திப்பின் போது, பொதுவான கூட்டணி ஒன்றை உருவாக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கூட்டணி அமைத்துக் கொள்வது தொடர்பாக, இந்த வாரம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், மகிந்த ராஜபக்சவும் சந்தித்து பேசவுள்ளனர்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.