தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கு உதவ ஐரோப்பிய ஒன்றியம் தயார்
வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு உதவத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை, தாய்லாந்தின் பாங்கொக் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதியும், துணைத் தலைவருமான பிரெட்ரிகா மொகெரினி சந்தித்து இருதரப்பு பேச்சுக்களை நடத்தினார்.
இதன்போதே, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து சிறிலங்காவுடன் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்திருப்பதை அதன் உயர் பிரதிநிதி உறுதி செய்தார்.
வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுப்பதற்கும் எதிர்ப்பதற்கும், நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளை ஒருங்கிணைப்பதை முன்னேற்றுவதற்கும்,இந்த சவாலை எதிர்கொள்வதில் சிறிலங்காவை ஆதரிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளது என்றும் பிரெட்ரிகா மொகெரினி தெரிவித்துள்ளார்.