மேலும்

மாதம்: June 2019

சஹ்ரானின் சகாக்கள் நால்வரின் சடலங்கள் தோண்டியெடுப்பு

அம்பாறை – சாய்ந்தமருதில், கடந்த ஏப்ரல் 26ஆம் நாள் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் நால்வரின், சடலங்கள் இன்று மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டன.

சுமார் 4 மணி நேரம் வரையே சிறிலங்காவில் தங்குவார் மோடி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சில மணித்தியாலங்களே இங்கு தங்கியிருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா வழங்கிய ‘கஜபாகு’ போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படையில் இணைப்பு

அமெரிக்கா கொடையாக வழங்கிய போர்க்கப்பல் நேற்று ‘எஸ்எல்என்எஸ் கஜபாகு’ என்ற பெயருடன், (P-626) சிறிலங்கா கடற்படையில், இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு – மோடியின் சிறிலங்கா பயணத்தில் முக்கிய கவனம்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான, இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கூடுதல் கவனம் செலுத்துவார் என்று புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அதிபர் மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகளை சுமத்தும் பூஜித ஜயசுந்தர

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன் சாட்சியம் அளித்த – கட்டாய விடுமுறையில் உள்ள சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, சிறிலங்கா அதிபர் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளார்.

பாதுகாப்புச் சபை கூட்டத்துக்கு அனுமதிக்கவில்லை – பூஜித் ஜயசுந்தர பரபரப்பு சாட்சியம்

தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் தம்மைக் கலந்து கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபா சிறிசேன கூறியிருந்தார் என, கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ள சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சாட்சியம் அளித்துள்ளார்.

‘இலங்கையின் போரும் சமாதானமும்’ – ஒஸ்லோவில் இன்று புத்தக அறிமுக அரங்கு

‘இலங்கையின் போரும் சமாதானமும்’ – நோர்வேயின் சமாதானத் தோல்வியின் விளைவுகள்,  என்ற பேராசிரியர் Øivind Fuglerudஇன் புத்தக அறிமுக அரங்கு ஒஸ்லோவில் இன்று இடம்பெறுகின்றது.

சிறிலங்காவுக்கு உதவும் 20 அவுஸ்ரேலிய புலனாய்வு அதிகாரிகள்

ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பான  விசாரணைகளுக்கு உதவுவதற்காக அவுஸ்ரேலியா 20 புலனாய்வு நிபுணர்களை சிறிலங்காவுக்கு அனுப்பியிருப்பதாக, அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்தார்.

அமெரிக்க – சிறிலங்கா கடற்படைகளுக்கிடையில் கூடுதல் பயிற்சி வாய்ப்புகள் குறித்து பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், அரசியல், இராணுவ விவகாரங்களுக்கான உதவிச் செயலர் கிளார்க் கூப்பர், கிழக்கு கடற்படைத் தலைமையகத்துக்கும், கண்ணிவெடிகளை அகற்றும் பகுதிகளுக்கும் சென்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

குருநாகல மருத்துவருக்கு எதிராக முஸ்லிம் பெண்ணும் முறைப்பாடு

சிங்களப் பெண்களுக்கு கருத்தரிக்க முடியாத நிலையை ஏற்படுத்தினார் என்று குற்றம்சாட்டப்படும் குருநாகல மருத்துவமனை மகப்பேற்று நிபுணர் செய்கு சியாப்தீனுக்கு எதிராக முஸ்லிம் பெண் ஒருவரும்  நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.