மேலும்

அமெரிக்கா வழங்கிய ‘கஜபாகு’ போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படையில் இணைப்பு

அமெரிக்கா கொடையாக வழங்கிய போர்க்கப்பல் நேற்று ‘எஸ்எல்என்எஸ் கஜபாகு’ என்ற பெயருடன், (P-626) சிறிலங்கா கடற்படையில், இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்வில், இந்தப் போர்க்கப்பலின்  கட்டளை அதிகாரி கப்டன் றோகித  அபேசிங்கவிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, போர்க்கப்பலை, இணைக்கும்  ஆணையை வழங்கினார்.

இந்த நிகழ்வில், சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், முப்படைகளின் தளபதிகள், மற்றும் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தப் போர்க்கப்பல் சிறிலங்காவின் ஆழ்கடல் கண்காணிப்பு திறனை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *