மேலும்

மாதம்: June 2019

முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் நாடகமா? – அதிபருக்கு கடிதம் அனுப்பப்படவில்லை

அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஒன்பது முஸ்லிம் அமைச்சர்களினதும் பதவி விலகல் கடிதங்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்னமும் அனுப்பி வைக்கப்படவில்லை என்று, தகவல்கள் வெளியாகியுள்ளன.

முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் பதவியேற்குமாறு பௌத்த பீடங்கள் அழைப்பு

பதவியில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள், மீண்டும் தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளுமாறும், நாட்டு மக்களுக்கான கடமையை நிறைவேற்றுமாறும், மூன்று பௌத்த பீடங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

சிறிலங்காவுக்கு நவீன இராணுவ கருவிகளை அனுப்புகிறது சீனா

கண்காணிப்பு கருவிகளை வழங்குமாறு சிறிலங்காவிடம் இருந்து சீனாவுக்கு கோரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்று, சிறிலங்காவுக்கான சீன தூதுவர் செங் ஷியுவான் தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழு முன்பாக பூஜித, ஹேமசிறி இன்று சாட்சியம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்பாக, சாட்சியமளிக்க, காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சர் பதவி ஐதேகவுக்கு- மைத்திரி இணக்கம்

சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சர் பதவியை ஐதேகவைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.

போட்டியில் இருந்து விலகுகிறார் மைத்திரி – ஐதேக பக்கம் சாய்கிறார்

வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

படகில் வருவோருக்கு ஒருபோதும் புகலிடம் கிடையாது – அவுஸ்ரேலிய அமைச்சர்

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பாக இன்னமும் கடுமையான கொள்கையையே அவுஸ்ரேலியா பின்பற்றுகிறது என்றும், படகு மூலம் அவுஸ்ரேலியா செல்பவர்களின் புகலிடக் கோரிக்கைகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட வாய்ப்பே இல்லை என்றும் அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் குழுவின் 32 பேருக்கு ஊதியம் கொடுத்த மகிந்த அரசு – அரசின் கையில் சான்றுகள்

தீவிரவாதி சஹ்ரான் காசிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு, மகிந்த ராஜபக்ச அரசாங்கம், நிதி கொடுப்பனவுகளை வழங்கியது என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வழங்கிய போர்க்கப்பல் நாளை சிறிலங்கா கடற்படையில் இணைப்பு

அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்டுள்ள சிறிலங்கா கடற்படையின் மிகப் பெரிய போர்க்கப்பலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை ஆணையிட்டு கடற்படையில் இணைத்துக் கொள்ளவுள்ளார்.

மகிந்தவுக்கு குண்டு துளைக்காத வாகனம் – மைத்திரி நிராகரிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் பாவனைக்காக, குண்டுதுளைக்காத வாகனத்தைக் கொள்வனவு செய்யும் யோசனைக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.