மேலும்

நாள்: 23rd June 2019

கைவிடப்பட்டது கல்முனை உண்ணாவிரதப் போராட்டம் – முஸ்லிம்களின் போராட்டமும் நிறைவு

கல்முனை வடக்கு தமிழ்  பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கடந்த திங்கட்கிழமை காலையில் இருந்து நடத்தப்பட்டு வந்த  உண்ணாவிரத போராட்டம்  இன்று முற்பகலுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

19 ஆவது திருத்தச்சட்டத்தை ஒழித்தால் தான் நாட்டுக்கு விமோசனம் – மைத்திரி

சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு, அரசியலமைப்பின் 18 ஆவது மற்றும் 19 ஆவது திருத்தச் சட்டங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சீனாவிடம் 1 பில்லியன் டொலர் கடன் பெறுகிறது சிறிலங்கா

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின், ஒரு பகுதியை நிறைவேற்றுவதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு 1 பில்லியன் டொலர் கடனை வழங்க சீனா முன்வந்துள்ளது.

8000 வெளிநாட்டவர்களை நாடு கடத்த தயாராகும் சிறிலங்கா

நுழைவிசைவு காலாவதியான நிலையில், சிறிலங்காவில் தங்கியுள்ள 8000 வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர். இதற்குத் தேவையான நிதி மற்றும் ஒழுங்குகளைச் செய்வதற்கு, அமைச்சரவையின் ஒப்புதலை உள்நாட்டு விவகார அமைச்சு கோரவுள்ளது.

போட்டியில் இருந்து விலகுகிறார் சிறிசேன

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்ளக் கூடும் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா? – சுபத்ரா

இலங்கை இராணுவத்தில் சர்ச்சைக்குரிய அதிகாரிகளில் முதன்மையானவராக கருதப்படும், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு ஆறு மாதகால சேவை நீடிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டிருக்கிறது.

சிறிலங்கா தாக்குதல்கள் குறித்து முதலில் அறிந்திராத ஐஎஸ் – விசாரணைகளில் தகவல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு, ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியிருந்த போதிலும், இவ்வாறான தொடர் தாக்குதல் இடம்பெற்றிருந்தது குறித்து, ஆரம்பத்தில் அந்த அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரணைகளுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் தி ஹிந்து நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.