மேலும்

மாதம்: February 2019

1.95 பில்லியன் ரூபா செலவில் பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு அமைச்சரவை அங்கீகாரம்

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் 1.95 பில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்வதற்கான  திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

கீரிமலை ஆடம்பர மாளிகை – வடக்கு மாகாணசபைக்கு கைவிரித்தார் சிறிசேன

காங்கேசன்துறை, கீரிமலையில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட ஆடம்பர மாளிகையை, சுற்றுலா சபையிடம் கையளிப்பது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடியுள்ளார்.

மாகாண சபைகளை, ‘மாகாண அரசு’ என அழைக்கக்கூடாது – சிறிலங்கா அதிபர் கண்டிப்பு

மாகாண சபைகளை,  மாகாண அரசுகள் என்று அழைக்கக் கூடாது என்று நிதி ஆணைக்குழுவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பொதுமன்னிப்பு பட்டியலில் அரசியல் கைதிகள், ஞானசார தேரர் இல்லை

சிறிலங்காவின் 71ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, 545 சிறைக்கைதிகள் இன்று பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்படவுள்ளனர்.

சிறிலங்காவுடன் உறவுகளை வலுப்படுத்த விரும்பும் அமெரிக்கா

சிறிலங்காவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, இணைந்து பணியாற்றுவதற்கு விரும்புவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் 71ஆவது சுதந்திர நாள் இன்று – கரிநாளாக கடைப்பிடிக்கும் தமிழர்கள்

சிறிலங்காவின் 71 ஆவது சுதந்திர நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழர் தாயகத்தில் கரிநாளாக அதனை கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசில் இணையத் தயாராகும் சுதந்திரக் கட்சி எம்.பிக்கள்

தேசிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள யோசனை எதிர்வரும் 7ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் அதில் இணைந்து கொள்ளவுள்ளனர் என்று ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிகேடியர் பிரியங்க மீதான பிடியாணை நீக்கம் – சிறிலங்கா வரவேற்பு

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக, பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணையை விலக்கிக் கொண்டிருப்பதை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வரவேற்றுள்ளது.

சீனாவிடம் 2 பில்லியன் டொலர் கடன் பெறுகிறது சிறிலங்கா –  300 மில்லியன் டொலர் இந்தவாரம்

சீனாவிடம் பெறவுள்ள 2 பில்லியன் டொலர் கடனுதவியில், முதற்கட்டமாக 300 மில்லியன் டொலர் இந்த வாரம் சிறிலங்காவுக்குக் கிடைக்கும் என்று தகவல்கள்  தெரிவிக்கின்றன.

44 நாடுகள் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா போர்க்கப்பல்

பாகிஸ்தானில் 44 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் அமான்-2019 என்ற பெயரிலான பாரிய கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது.