மேலும்

நாள்: 22nd February 2019

ஊடகத்துறை அமைச்சராகப் பதவியேற்றார் ருவன் விஜேவர்த்தன

சிறிலங்காவின்  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான,  ருவன் விஜேவர்த்தன சற்று முன்னர், ஊடகத்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். 

அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு? – தேடிச் சென்ற காவல்துறையினர் ஏமாற்றம்

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, தலைமறைவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் கைது

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய, கடற்படைச் சிப்பாய் ஒருவர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவி்ல் பிறந்திருந்தால் புலியாகிப் போராடியிருப்பேன் – ஞானசார தேரர்

முல்லைத்தீவி்ல் பிறந்திருந்தால் ஒரு தமிழனாக, புலியாகிப் போராடியிருப்பேன் என்று பொது பலசேனாவின் பொதுச் செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா- சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பாக, இரண்டு நாடுகளுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

மீண்டும் அரசியலமைப்பு சபையில் சம்பந்தன்?

அரசியலமைப்பு சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான  இரா.சம்பந்தன் நியமிக்கப்படவுள்ளார் என்றும், இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு, கிழக்கு தழுவிய முழு அடைப்பு – இன்னமும் பச்சைக்கொடி காண்பிக்காத கூட்டமைப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காத்து வருகிறது.

குற்றவாளிகளைப் பாதுகாக்கவா மனித உரிமை ஆணைக்குழு?- சிறிசேன பாய்ச்சல்

சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு மீது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிக்க மைத்திரி, ரணில், மகிந்த இணக்கம்

நிறைவேற்று அதிகார அதிபர்  ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோர் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.