மேலும்

நாள்: 27th February 2019

பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை நிறுத்தியது சிறிலங்கன் விமான சேவை

பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூர் நகரங்களுக்கான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

சிறிசேன படுகொலைச் சதி – இந்தியரை விடுவித்தது நீதிமன்றம்

சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களைப் படுகொலை செய்யும் சதித்திட்டத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியர் இன்று கோட்டை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

உண்மை நல்லிணக்க ஆணைக்குழு யோசனை – இழுத்தடிக்கும் பாதுகாப்பு அமைச்சு

உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் யோசனையை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சு தாமதித்து வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஒபாமாவின் வருகையை ஏற்றுக்கொள்ள மறுத்த சிறிலங்கா – மங்கள சமரவீர  தகவல்

அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா, 2016ஆம் ஆண்டு சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஒன்று, சிறிலங்கா அரசாங்கத்தினால் தவறிப் போனதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், தற்போதைய நிதியமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

2018இல் நாடாளுமன்றில் வாயை மூடியிருந்த 13 எம்.பிக்கள் – அங்கஜன், ஆறுமுகனும் அடக்கம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 2018ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் டிசெம்பர் வரையான நாட்களில், 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், விவாதங்கள் எதிலும் உரையாற்றவில்லை என்று தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் மீதான தாக்குதல் – சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா விளக்கம்

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நேற்று அதிகாலை இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக, சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா விளக்கமளித்துள்ளது.

உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு சம்பிக்க ரணவக்க எதிர்ப்பு

உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் யோசனைக்கு சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

வடக்கில் 248 பாடசாலைகளுக்கு மூடுவிழா

வடக்கு மாகாணத்தில் உள்ள 248 பாடசாலைகளை மூடுவதற்கு மாகாண கல்வித் திணைக்களம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.