மேலும்

மாதம்: November 2018

வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட அமைச்சர் பைசர் முஸ்தபா

பிரதமரை நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணை மூலமே பதவியில் இருந்து நீக்க முடியும் என்று கூறி, மாட்டிக் கொண்டுள்ளார் சிறிலங்காவின் அமைச்சர் பைசர் முஸ்தபா.

நாடெங்கும் பாதுகாப்பை தீவிரப்படுத்த நள்ளிரவில் உத்தரவு

நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, நாடு முழுவதும், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய

நாடாளுமன்றத் தேர்தலுக்கான செயற்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தி வைத்திருப்பதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவை உன்னிப்பாக கண்காணிக்கிறது ஜப்பான்

ஜப்பானின் நீண்டகால நட்பு நாடான சிறிலங்காவில், நாடாளுமன்றக் கலைப்பு உள்ளிட்ட அண்மைய அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, ஜப்பான் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்

சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது தற்போது முக்கியம் என்று ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

குழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்பு

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மற்றும் நாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக அறிவித்துள்ள சபாநாயகரின் முடிவு என்பன, மகிந்த- மைத்திரி தரப்பினரை கடும் குழப்பத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.

பாதுகாப்புச் சபையை அவசரமாக கூட்டினார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை அவசரமாக கூட்டியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரவுக்குப் பின்னர் உச்சநீதிமன்றில் – (படங்கள்)

நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசிதழ் அறிவிப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்ததை அடுத்து, உச்சநீதிமன்றத்துக்குள்ளேயும், வெளியேயும் பெரும் ஆரவாரமான நிலை காணப்பட்டது.

மகிந்த பதவி விலகவில்லை – நாமல் அறிவிப்பு

பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் நாளை கூடும் – சபாநாயகர் அறிவிப்பு

பெரும் பரபரப்புக்கு மத்தியில் சிறிலங்கா நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் செயலகம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.