மேலும்

நாள்: 7th November 2018

மேலும் மூன்று அமைச்சர்களை நியமித்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை இரண்டு அமைச்சர்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

மனோ கணேசனிடம் மைத்திரி கேட்ட மூன்று ‘வரங்கள்’

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியை இன்று காலை சந்தித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

இன்றிரவு நாடாளுமன்றத்தைக் கலைக்க சிறிலங்கா அதிபர் திட்டம்?

சிறிலங்கா நாடாளுமன்றத்தை இன்றிரவு கலைப்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் கிடைத்துள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கோத்தாவின் வாகனம் உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், அவரது மனைவியும் பயணித்த வாகனம், இன்று காலை விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டமைப்புடன் சிறிலங்கா அதிபர் ஒன்றரை மணிநேரம் பேச்சு

இரா.சம்பந்தன் தலைமையிலான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து நீண்ட பேச்சுக்களை நடத்தியது.

தென்னாசியாவில் விரிவடையும் ஆதிக்கப் போட்டி

சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான தென்னாசியப் பிராந்தியத்தின் பூகோள-மூலோபாய போட்டியில், முக்கிய பங்குதாரராகக் கருதப்படும் சிறிலங்காவின் தற்போதைய அரசியல் குழப்பநிலையை, இவ்விரு நாடுகளும் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

இந்தியாவுடனான பேச்சுக்களில் இழுபறி

சிறிலங்காவில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பினால், கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக, இந்தியாவுடன் நடத்தப்படவிருந்த பேச்சுக்களில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

மத்தல, கொழும்பை இந்தியா கேட்டதன் பின்னணியை வெளிப்படுத்துகிறார் விஜேதாச

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதால் தான், கொழும்பு துறைமுகத்தையும், மத்தல விமான நிலையத்தையும் இந்தியா கோரியது என்று சிறிலங்காவின் கல்வி உயர் கல்வி அமைச்சராக விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு மகா சங்கத்தினர் பேரணி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தைக் கூட்டி அரசியலமைப்பு நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் நேற்று கொழும்பில் பேரணியில் ஈடுபட்டனர்.

மகிந்தவுக்காக கட்சியின் யாப்பில் திருத்தம் செய்கிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி?

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைப்புச் செய்வது குறித்த முக்கியமான செயற்குழுக் கூட்டம் நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.