மேலும்

நாள்: 14th November 2018

விகிதாசார முறையில் மாகாணசபைத் தேர்தல் – அமைச்சரவை முடிவு

பழைய முறைப்படியே மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது என்று சிறிலங்கா அமைச்சரவை முடிவு செய்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புக்கு அமைய அடுத்த கட்டம் குறித்து முடிவு

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லை என்பதை வெளிப்படுத்தி, 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பிரேரணையை ஆராய்ந்த பின்னர், அடுத்த கட்டம் குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவெடுப்பார் என்று அமைச்சரவைப் பேச்சாளர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

122 எம்.பிக்களின் கையெழுத்து சபாநாயகரிடம் – மைத்திரிக்கு அனுப்பப்படுகிறது

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆவணம் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பதவியில் இருந்து இறங்க மறுக்கிறது மகிந்த அணி

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நிராகரித்துள்ள, அரசாங்கத் தரப்பு, மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலகமாட்டார் என்று அறிவித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு வெளியே பதற்றம்

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை மகிந்த தரப்பு நிராகரித்துள்ள நிலையில், சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு வெளியே பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தற்போது, செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

மகிந்த அரசு தோல்வி – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மகிந்த தரப்பு ஏற்க மறுத்து வரும் நிலையில், ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய கடிதம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் சுவாரசிய காட்சிகள்

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று சற்று நேரத்தில் கூடவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகம் பெரும் பரபரப்பான நிலையில் உள்ளது. இரண்டு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும், இன்று நேரகாலத்துடனேயே சபைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட அமைச்சர் பைசர் முஸ்தபா

பிரதமரை நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணை மூலமே பதவியில் இருந்து நீக்க முடியும் என்று கூறி, மாட்டிக் கொண்டுள்ளார் சிறிலங்காவின் அமைச்சர் பைசர் முஸ்தபா.

நாடெங்கும் பாதுகாப்பை தீவிரப்படுத்த நள்ளிரவில் உத்தரவு

நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, நாடு முழுவதும், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.