மேலும்

சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்

சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது தற்போது முக்கியம் என்று ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தமை குறித்து அவர் தனது கீச்சகப்பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில், “தான் புதிய பிரதமராக முன்மொழிந்த – போர்க்குற்றங்கள் குறித்து நம்பகமாக குற்றம்சாட்டப்படும், முன்னாள் அதிபரை முன் கொண்டு வருவதற்காக,  நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் சிறிசேனவின், முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது.

சிறிலங்காவில் உள்ள நிறுவனங்கள் வளைகின்றன. ஆனால் உடையவில்லை. அனைத்துலக அழுத்தங்களை அதிகரிக்க வேண்டியது முக்கியம்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *