மேலும்

பாதுகாப்புச் சபையை அவசரமாக கூட்டினார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை அவசரமாக கூட்டியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை அடுத்தே,  பாதுகாப்புச் சபையின் தலைவரான, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவசரமாக கூட்டியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் பல முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

நாளை நாடாளுமன்றத்தை  சபாநாயகர் கூட்டவுள்ள நிலையில், அதனைத் தடுப்பதற்காக, அவசரகாலச் சட்டத்தை பிறப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் குறித்தும், .இந்தக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *