மேலும்

நாள்: 16th November 2018

நாடாளுமன்றை ஒருபோதும் ஒத்திவைக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

எந்தவொரு சூழ்நிலையிலும் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகிந்த அணி எம்.பிக்களின் தாக்குதலில் காவல்துறையினர் காயம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடந்த குழப்பங்களின் போது, மகிந்த ராஜபக்ச அணியினரின் தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் பலரும் காயமடைந்தனர்.

காமினி ஜெயவிக்ரம பெரேரா, விஜித ஹேரத் மீது மிளகாய்த் தூள் வீச்சு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடந்த குழப்பங்களின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் காமினி ஜெயவிக்ரம பெரேரா மீது மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த உறுப்பினர்கள், மிளகாய்த் தூளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

முகம் சுழித்த வெளிநாட்டு இராஜதந்திரிகள்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற மோதல்கள் மற்றும் தாக்குதல்களை வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.

இரண்டாவது நம்பிக்கையில்லா பிரேரணை – என்ன நடந்தது?

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று இரண்டாவது தடவையாக, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டது.பெரும் கூச்சல் குழப்பங்கள், மோதல்களுக்கு மத்தியில் நடந்தேறிய நாடாளுமன்ற அமர்வு பற்றிய நேரலைப் பதிவுகளின் தொகுப்பு.

நாடாளுமன்றைக் கூட்டி பிரச்சினைக்குத் தீர்வு காண மல்வத்த மகாநாயக்கர் மைத்திரிக்கு அழுத்தம்

நாடாளுமன்றத்தைக் கூட்டி, நாட்டில் தற்போதுள்ள அரசியல் உறுதியற்ற நிலையை முடிவுக்குக் கொண்டு வருமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரர், வண.திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சற்று நேரத்தில் கூடுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்னும் சற்று நேரத்தில் கூடவுள்ளது.  நேற்று நாடாளுமன்ற அமர்வின் போது இடம்பெற்ற மோதல்கள் மற்றும் குழப்பங்களை அடுத்து இன்று பிற்பகல் 1.30 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.