குழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்பு
உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மற்றும் நாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக அறிவித்துள்ள சபாநாயகரின் முடிவு என்பன, மகிந்த- மைத்திரி தரப்பினரை கடும் குழப்பத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மற்றும் நாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக அறிவித்துள்ள சபாநாயகரின் முடிவு என்பன, மகிந்த- மைத்திரி தரப்பினரை கடும் குழப்பத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை அவசரமாக கூட்டியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசிதழ் அறிவிப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்ததை அடுத்து, உச்சநீதிமன்றத்துக்குள்ளேயும், வெளியேயும் பெரும் ஆரவாரமான நிலை காணப்பட்டது.
பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பெரும் பரபரப்புக்கு மத்தியில் சிறிலங்கா நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் செயலகம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும், சிறிலங்கா அதிபரின் அரசிதழ் அறிவிப்பை சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் சற்று முன்னர் இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான மூன்று நீதியரசர்கள் இன்னமும், அமர்வுக்கு வரவில்லை.
சிறிலங்கா உச்சநீதிமன்றத்துக்கு வெளியே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுடன் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை நடத்தவிருந்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன, கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக தகவல்களை வெளியிட்ட, நாமல் குமாரவை நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்தும் திட்டம் ஏதும் கிடையாது என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.