மேலும்

மாதம்: November 2018

நாடாளுமன்ற கலைப்பு இடைநிறுத்தம் – உச்சநீதிமன்றம் உத்தரவு

சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும், சிறிலங்கா அதிபரின் அரசிதழ் அறிவிப்பை சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் சற்று முன்னர் இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதியரசர்கள் வராததால் பரபரப்பு தீவிரம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான மூன்று நீதியரசர்கள் இன்னமும், அமர்வுக்கு வரவில்லை.

உச்சநீதிமன்றப் பகுதியில் பதற்றம்

சிறிலங்கா உச்சநீதிமன்றத்துக்கு வெளியே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைப்பாளர்களுடனான சந்திப்பை இடைநிறுத்தினார் மைத்திரி

சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுடன்  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை நடத்தவிருந்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

நாமல் குமாரவுக்கு இடமில்லை – கைவிரித்தது ‘மொட்டு’ கட்சி

மைத்திரிபால சிறிசேன, கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக தகவல்களை வெளியிட்ட, நாமல் குமாரவை நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்தும் திட்டம் ஏதும் கிடையாது என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

சற்று நேரத்தில் வெளியாகிறது உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவு இன்னும் சற்று நேரத்தில் உச்சநீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்படவுள்ளது.

மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை – சட்டமா அதிபர் வாதம்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய இன்று உச்சநீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

மொட்டில் போட்டியிடுகிறார் நாமல் குமார – வெளுத்தது சாயம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்ட நாமல் குமார, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

ஐதேக தலைவராக, பிரதமர் வேட்பாளராக நிற்கத் தயார் – சஜித் பிரேமதாச

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கத் தயார் என்றும், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குருநாகலவில் மீண்டும் களமிறங்குகிறார் மகிந்த

வரும் ஜனவரி 05ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, குருநாகல மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.