மேலும்

நாள்: 26th November 2018

மீண்டும் அலரி மாளிகையில் வசந்த சேனநாயக்க

சுற்றுலா மற்றும் வன உயிரினங்கள் அமைச்சர் வசந்த சேனநாயக்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் சாய்ந்துள்ளார். அலரி மாளிகையில் இன்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் வசந்த சேனநாயக்க பங்கேற்றுள்ளார்.  

யாழ். பல்கலை.யில் பிரபாகரன் பிறந்தநாள் – வல்வையில் காவல்துறை கெடுபிடி

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றுஉலகின் பல்வேறு நாடுகளிலும், தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழர் தாயகப் பிரதேசங்களிலும் பல்வேறு இடங்களிலும், கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு

ஒக்ரோபர் 26 காலை 10 மணியளவில், சிறிலங்காவின் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்தது. தொலைபேசியில் மகிந்த ராஜபக்சவின் அரசியல் எதிரியான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொடர்பு கொண்டிருந்தார்.

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான மனுக்களை விசாரிக்க 7 நீதியரசர்களைக் கொண்ட குழாம்

நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரிப்பதற்கு, தமது தலைமையிலான ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாமை சிறிலங்காவின் தலைமை நீதியரசர், நளின் பெரேரா நியமித்துள்ளார்.

மௌனத்தை உடைத்தார் துமிந்த திசநாயக்க – மைத்திரிக்கு எதிராக புதிய அணி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்துள்ள துமிந்த திசநாயக்க உள்ளிட்டவர்கள், தனி அணியாகச் செயற்படத் திட்டமிட்டுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

குற்றச்சாட்டு தொடர்ந்தால் நானும் அம்பலப்படுத்துவேன் – மைத்திரிக்கு சாகல எச்சரிக்கை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தம் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சுமத்தினால், தாம் பல இரகசியங்களை பகிரங்கப்படுத்த வேண்டிய நிலை வரும் என்று எச்சரித்துள்ளார் முன்னாள் அமைச்சரும் ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகல ரத்நாயக்க.

அரச நிறுவனங்களைப் பிடித்த மோசடியாளர்கள் – மைத்திரிக்கு தலைவலி

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றம்சாட்டப்பட்ட சிலர் அண்மையில், முக்கிய அரச நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்ட விவகாரம் சிறிலங்கா அதிபருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை மா அதிபரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் 4 மணிநேரம் விசாரணை

சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், நான்கு மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அட்மிரல் ரவீந்திர மீது நடவடிக்கை – காவல்துறை மா அதிபருக்கு பரிந்துரை

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் ஆர்.பி.செனிவிரத்ன, சிறிலங்கா காவல்துறை மா அதிபரிடம் கோரியுள்ளார்.

தனக்கு எதிராக சாட்சியமளித்த கடற்படை அதிகாரியை சுடத் துரத்திய அட்மிரல்

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கின் முக்கிய சாட்சியான, சிறிலங்கா கடற்படை அதிகாரியை, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உள்ளிட்ட ஆறு கடற்படை அதிகாரிகளால் தாக்கப்பட்டுள்ளார்.