மேலும்

நாள்: 17th November 2018

மாலைதீவில் சந்திரிகாவுக்கு முக்கியத்துவம் – மோடியையும் சந்திப்பு

மாலைதீவில் புதிய அதிபர் இப்ராகிம் சோலி தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்கும் நிகழ்வில்- சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் குதிரை பேரம் – 3 மில்லியன் டொலருக்கு விலை பேசப்படும் எம்.பிக்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும்  குதிரை பேரத்தில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் மீண்டும் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்ற மகிந்த முன்வைக்கும் 12 வழிமுறைகள்

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முறைப்படி நிறைவேற்றுவதற்கு 12 வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவின் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு நம்பிக்கையில்லா பிரேரணையையும் எதிர்கொள்ளத் தயார் – சிறிலங்கா அரசாங்கம்

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக முறையாக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று, ஆளும்தரப்பு உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கலைப்புக்கு துணை நின்ற மல்கம் ரஞ்சித், சரத் என் சில்வா, மகிந்த தேசப்பிரிய

சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சதித் திட்டத்துக்கு, கர்தினால் மல்கம் ரஞ்சித், நீதியரசர் சரத் என் சில்வா, தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஆகியோர் துணையாக இருந்தனர் என்று லங்காதீப சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வீசியது மிளகாய் தூள் அல்லவாம் – நாடாளுமன்றக் கூத்துகள்

நாடாளுமன்றத்துக்குள் நேற்று நடந்த குழப்பங்களின் போது, காவல்துறையினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது வீசப்பட்டது மிளகாய்த் தூள் அல்ல, அது மென்பானங்களின் கலவையே என்று கூறியிருக்கிறார் சிறிலங்காவின் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க.

சம்பந்தனை சந்திக்க அழைக்கிறார் மைத்திரி

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

முக்கிய ஆலோசனையில் மகிந்த – வெளியேற்ற முடியாதென சூளுரை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போது முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பான்மை இல்லாமல் அரசாங்கம் எதற்கு? – மகிந்த தரப்பைக் கேட்கும் குமார வெல்கம

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல், ஆளும்கட்சியாக தொடர்வதாக கூறுவதும், அரசாங்க ஆசனங்களை அடாவடித்தனமாக கைப்பற்றியிருப்பதும் தவறானது என்று மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்களுக்கு மைத்திரி வாக்குறுதி கொடுக்கவில்லையாம்

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு அனுமதி அளிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கட்சித் தலைவர்களுக்கு வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.