மேலும்

மாதம்: August 2017

மைத்திரியில் கையில் உள்ள தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அமைச்சே படுமோசம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பில் உள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு இந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், அரையாண்டு காலத்தில் 3.3 வீதத்தை மட்டுமே செலவிட்டுள்ளதாக அரசாங்கத்தின் அதிகாரபூர்வ புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

20 ஆவது திருத்தச் சட்டவரைவை வட மாகாணசபை ஆதரிக்க வாய்ப்பில்லை – முதலமைச்சர்

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவுக்கு, வடக்கு மாகாணசபை ஆதரவு அளிப்பதற்கு வாய்ப்பில்லை என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது காலாண்டில் சிறிலங்கா அரசின் வருமானம் கடும் வீழ்ச்சி

சிறிலங்கா அரசாங்கத்தின் வருமானம், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அமைச்சர் கயந்த கருணாதிலக நாடாளுமன்றத்தில் நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்ட வரைவு மீது இன்று வாக்கெடுப்பு

உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்ட வரைவு மீது சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் நேற்று இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் கீதா குமாரசிங்கவுக்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கீதா குமாரசிங்க மாத்திரமே, இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒரே உறுப்பினர் என்று குடிவரவு குடியகல்வு திணைக்களம் உறுதிப்படுத்தியிருப்பதாக, பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறையில் இருந்து வீடு செல்ல விடுமுறை

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளனை, ஒரு மாதம் விடுமுறையில் (பரோல்) வீடு செல்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு இது தொடர்பான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைவு ஊவா மாகாணசபையில் தோல்வி

சிறிலங்கா அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவு ஊவா மாகாணசபையில் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ராஜித சேனாரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகர்  கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க வேண்டும் – அனைத்துலக மன்னிப்புச் சபை

ஜெனிவாவில் சிறிலங்கா அளித்துள்ள முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றங்களை காண்பிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்பு சபை கோரியுள்ளது.

சீருடையில் தவறு செய்த கடற்படையினர் தண்டிக்கப்படுவர் – சிறிலங்கா கடற்படைத் தளபதி

போரில் எத்தகைய சாதனைகளைச் செய்திருந்தாலும், சீருடையில் தவறு செய்த கடற்படையினர் தண்டிக்கப்படுவார்கள் என்று சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார்.