ராஜித சேனாரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 39 பேர், கையெழுத்திட்டு இந்த நம்பிக்கையில்லா பிரேரணையைச் சமர்ப்பித்துள்ளனர்.
எனினும், கூட்டு எதிரணிக்குத் தலைமை தாங்கும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடவில்லை என்றும் தெரியவருகிறது.