மேலும்

திருகோணமலை கடலில் தத்தளித்த 2 யானைகளை மீட்டது சிறிலங்கா கடற்படை

jumbo-rescue (1)திருகோணமலை கடலில் நேற்றுக்காலை தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு யானைகளை சிறிலங்கா கடற்படையினர் மீட்டு, பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்தனர்.

கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு யானைகள் திருகோணமலை வட்டத்தீவுக்கும் பவுல் முனைக்கும் இடையில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தன.

கரையோர ரோந்துப் படகு ஒன்றில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையினர் இதனை அவதானித்தனர்.

உடனடியாக, கிழக்கு கடற்படைத் தலைமையகத்துக்கு அவர்கள் தகவல் கொடுத்ததை அடுத்து, மேலதிக கடற்படையினர், வனவிலங்குகள் திணைக்கள அதிகாரிகளுடன் அந்த இடத்துக்கு  விரைந்தனர்.

jumbo-rescue (1)

jumbo-rescue (2)

jumbo-rescue (3)

jumbo-rescue (4)

jumbo-rescue (5)

கடற்படை சுழியோடிகளும் மூன்று அதிவேக தாக்குதல் படகுகளும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதையடுத்து இரண்டு யானைகளும் பாதுகாப்பாக, பவுல்முனை கரைக்கு கொண்டு வரப்பட்டன. கரையேறிய யானைகள் இரண்டும், பவுல்முனை காட்டுக்குள் விடப்பட்டன.

elephant-rescue (1)முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் கரையில் இருந்து 8 கடல் மைல் தொலைவில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த யானை ஒன்றை கடந்த ஜூலை 11ஆம் நாள் சிறிலங்கா கடற்படையினர் மீட்டு கரைசேர்த்திருந்தனர் .

கிழக்குக் கடலில் யானைகள் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *