ஜப்பானிய போர்க் கப்பலில் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் ஜப்பானிய கடற்படையின் போர்க்கப்பல்களை, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன மற்றும் பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேரத்ன, ஜப்பானிய கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி நாசகாரி கப்பலான இசுமோ மற்றும் சசகாமி ஆகிய போர்க்கப்பல்களுக்கு நேற்றுக்காலை சென்று பார்வையிட்டார்.
இதன் போது சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு ஜப்பானிய கடற்படையினர் அணிவகுப்பு மரியாதையை அளித்தனர்.
ஜப்பானிய உதவிப் பாதுகாப்பு அமைச்சர் ஹிரோயுகி மியாசாவா மற்றும் முதலாவது பாதுகாப்பு கப்பல்கள் அணியின் தளபதியான றியர் அட்மிரல் யொசிஹிரோ கோகா உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள், அவரை வரவேற்றனர்.
இதையடுத்து, இசுமோ மற்றும் சசனாமி ஆகிய போர்க்கப்பலில் உள்ள வசதிகள் குறித்து ஜப்பானிய அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
அதேவேளை, சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கபில வைத்திய ரத்னவும், தனியாகச் சென்று ஜப்பானிய கப்பல்களைப் பார்வையிட்டார். இதன் போது சிறிலங்கா கடற்படைத் தளபதியும் உடன் சென்றிருந்தார்.