சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு
இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர பயிற்சித் திட்டங்கள் தொடர்பாக, சிறிலங்கா இராணுவத் தளபதியுடன், இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கலந்துரையாடியுள்ளார்.
சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை, இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவ் மற்றும் துணை பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் ஜி.எஸ்.கிளயர் ஆகியோர் நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர பயிற்சித் திட்டங்கள் தொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
இரண்டு நாடுகளின் இராணுவக் கட்டமைப்புகளுக்கு இடையிலும், மேலும் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதன் அவசியம் குறித்தும் இதன் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.