மேலும்

வடமராட்சியில் வீதியில் ரயர்கள் எரிக்கப்பட்டு காவல்துறைக்கு எதிர்ப்பு – காலையில் மீண்டும் பதற்றம்

ture-burntமணல்காட்டில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று காலையில் பருத்தித்துறை- கொடிகாமம் வீதியில் ரயர்கள் கொளுத்தப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

வடமராட்சியில் உள்ள துன்னாலைக்கும் கலிகைச் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே வீதியில் ரயர்கள் எரிக்கப்பட்டுள்ளன.

இதனால், பருத்தித்துறை- கொடிகாமம் வீதி ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. அத்துடன் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ture-burnt

சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞன் துன்னாலையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம்- உதயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *