நாளை மறுநாள் திருகோணமலையில் மகிந்த அணியின் அரச எதிர்ப்புப் பேரணி
சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியன் ஓயில் நிறுவனத்துக்கு வழங்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் நாளை மறுநாள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளனர்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக தகவல் வெளியிட்ட கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, நாட்டின் சொத்துக்களை விற்கும் அரசாங்கத்தின் முடிவை மீளாய்வு செய்வதற்கு அரசுக்கு எதிரான சக்திகள் அனைத்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சீனக் குடா எண்ணெய்க் குதங்களுடன், திருகோணமலை துறைமுகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நிலங்களையும், இந்தியன் ஓயில் நிறுவனத்துக்கு விற்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட அனைவரும் இந்த நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த ஒன்றிணைய வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.