சிறிலங்காவுக்கு ஜிபார்ட் போர்க்கப்பல்களை கடனுக்கு விற்க ரஷ்யா முயற்சி
சிறிலங்காவுக்கு ஜிபார்ட் வகை போர்க்கப்பல்களை விற்பனை செய்வது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் ரஷ்யா பேச்சுக்களை நடத்தி வருவதாக, ரஷ்யாவின் இராணுவ – தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான சமஸ்டி சேவை தெரிவித்துள்ளது.
ஜிபார்ட் வகையைச் சேர்ந்த 5.1 போர்க்கப்பல்களை அரசாங்கங்களுக்கு இடையிலான உடன்பாட்டின் கீழ் ஏற்றுமதி கடன் திட்ட அடிப்படையில், சிறிலங்காவுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, ரஷ்யாவின் இராணுவ – தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான சமஸ்டி சேவையின் பெண் பேச்சாளர் மரியா வொரொப்யேவா தெரிவித்தார்.
ரஷ்ய நிதி அமைச்சு உள்ளிட்ட ரஷ்ய அரசாங்கமே இந்த விவகாரத்தைக் கையாளும். என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த தகவலை ரஷ்யாவின் ஸ்புட்னிக் நாளிதழ் நேற்று வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, சிறிலங்கா கடற்படைக்கு ரஷ்யாவிடம் ஜிபார்ட் வகை போர்க்கப்பல் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அப்போது சிறிலங்கா அரசாங்கம் அதனை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜிபார்ட் வகை போர்க்கப்பல்கள் எதிரி விமானங்கள், கப்பல்கள், நீர்மூழ்கிகளை தடுத்து தாக்குதல் வல்லமை பெற்றவையாகும்.