கூடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை
தாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை என ஈழத்தமிழ் மக்களின் ஜனநாயகப் போராட்ட வடிவமாகத் திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் ஏழாவது நேரடி அமர்வு அமெரிக்காவில் தொடங்கியது.
தாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை என ஈழத்தமிழ் மக்களின் ஜனநாயகப் போராட்ட வடிவமாகத் திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் ஏழாவது நேரடி அமர்வு அமெரிக்காவில் தொடங்கியது.
பளை- கச்சார்வெளியில் சிறிலங்கா காவல்துறை வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பாக முக்கியமான பல துப்புக்கள் கிடைத்துள்ளதாகவும், இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்ய முடியும் என்றும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அமைச்சரவை நாளை மாற்றி அமைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அனைத்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களையும் நாளை காலை 8.30 மணிக்கு அதிபர் செயலகத்துக்கு வருமாறு சிறிலங்கா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
தொழில் பூங்காவை உருவாக்குவதற்கு இந்தியாவின் ஆந்திர மாநில அரசாங்கத்துக்கு 500 ஏக்கர் காணியை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முன்வந்துள்ளது.
கனேடிய கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. எச்எம்சிஎஸ் வின்னிபெக் HMCS Winnipeg (FFH 338) என்ற றோயல் கனேடிய கடற்படைப் போர்க்கப்பலே சிறிலங்காவுக்கு பயிற்சி மற்றும் நல்லெண்ணப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.
சிறிலங்காவில் போருக்குப் பின்னர் காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கானோரைக் கண்டறியும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இரகசியத் தடுப்பு முகாம்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.
வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பருத்தித்துறை துறைமுகத்தை பார்வையிட்டார்.
தமிழ் மக்கள் அதிகளவில் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரிக்கும் கடன்படுநிலை தொடர்பாக சிறிலங்கா மத்திய வங்கி ஆய்வு நடத்தவுள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் சிறிலங்காவில் வறுமைக்கோட்டுக்குள் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் தொடர்ச்சியாக 16 மாதங்களாக இடம்பெற்றுள்ளன.