மட்டக்களப்பில் ‘எழுக தமிழ்’ – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், மட்டக்களப்பில் இன்று, ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன், ‘எழுக தமிழ்’ நிகழ்வு பேரெழுச்சியுடன் இடம்பெற்றது.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், மட்டக்களப்பில் இன்று, ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன், ‘எழுக தமிழ்’ நிகழ்வு பேரெழுச்சியுடன் இடம்பெற்றது.
காணாமலாக்கப்பட்டோரின் பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் நேற்று நடந்த சந்திப்பில், காணாமலாக்கப்பட்ட 15 பேர் தொடர்பான விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்க சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2008ஆம் ஆண்டில் 11 தமிழர்கள் காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யுமாறு, கொழும்பு கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், கிழக்கின் எழுக தமிழ் எழுச்சி நிகழ்வு மட்டக்களப்பில் இன்று காலை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காணாமல்போனோர் பணியகச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஐந்து மாதங்களிலேயே அதன் அதிகாரத்தைக் குறைக்கும் திருத்தச்சட்டம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தில், இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி விவகாரங்களைக் கையாள்வதற்காக புதிய படை அணி (ஸ்குவாட்ரன்) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் எரிபொருள் இறக்குமதி கடந்த ஜனவரி மாதத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. மோசமான வரட்சியின் காரணமாக நீர் மின் உற்பத்தி குறைந்துள்ளதையடுத்தே, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பொறுப்புக்கூறலுக்கான நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படமாட்டார்கள் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் நெருங்கிய வலுவான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள சிறிலங்கா விருப்பம் கொண்டுள்ளது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கேப்பாப்புலவில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி இன்றுடன் பத்தாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரதிநிதிகள் சிலரை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.