மேலும்

மாதம்: December 2016

கச்சதீவின் புதிய தோற்றம் – ஒளிப்படங்கள்

தமிழ்நாட்டுக்கும் இலங்கைத் தீவுக்கும் நடுவே அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவில், அமைந்துள்ள அந்தோனியார  ஆலயம் அருகே புதிய ஆலயம் ஒன்று கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தேஜஸ் போர் விமானத்தை ஆய்வு செய்தார் சிறிலங்கா விமானப்படைத் தளபதி

அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு தாக்குதல் உலங்குவானுர்தியைச் செலுத்திப் பார்த்துள்ளார் என்றும், தேஜஸ் போர் விமானத்தின் கட்டுப்பாட்டு முறையை ஆய்வு செய்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரவிராஜ் கொலை வழக்கில் இருந்து எதிரிகள் விடுதலையானது எப்படி?

சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு,  வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க முடியாது என்று, சிங்கள ஜூரிகள் சபை தெரிவித்துள்ளது.

அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியுள்ளது ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு – சுமந்திரன்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை வழக்கில் சிங்கள ஜூரிகள் சபை அளித்த தீர்ப்பை நிராகரித்துள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான அனைத்துலக நிபுணர்களின் விசாரணையே தேவை என்பதை இந்த தீர்ப்பு எடுத்துக் காட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆரூட எச்சரிக்கையால் சிறிலங்கா அதிபரின் பாதுகாப்பு அதிகரிப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வெளியான ஆரூடங்களை அடுத்து அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படைகளுக்கு பயிற்சி அளிக்க பென்டகன் அனுப்பிய சிறப்புக் கண்காணிப்புக் குழு

இம்மாதத்தின் ஆரம்பத்தில், அமெரிக்க கடற்படை அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுடன் ஒரு வாரகால கூட்டுப்பயிற்சிகளை மேற்கொண்ட பின்னர், அம்பாந்தோட்டையிலுள்ள மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

கட்டுநாயக்க விமான நிலைய புறப்படுகைப் பகுதிக்குள் விருந்தினர்களுக்கு தடை

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளுடன் வரும் விருந்தினர்கள், புறப்படுகை பிரதேசத்துக்குள் வரும் ஜனவரி 6ஆம் நாள் தொடக்கம் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

உலகின் மிக உயர்ந்த நத்தார் மரம் – கொழும்பில் தயார்நிலையில்

உலகின் மிக உயரமான நத்தார் மரத்தை நிறுவும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள காலிமுகத் திடலிலேயே, இந்த நத்தார் மரம் நிறுவப்பட்டுள்ளது.

அபிவிருத்தி சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தை திருத்துவதாக சிறிலங்கா பிரதமர் உறுதி

அபிவிருத்தி சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக சிறிலங்கா பிரதமர் நேற்று அழைத்திருந்த கூட்டத்தில் நான்கு மாகாணங்களின் முதலமைச்சர்கள் மாத்திரம் பங்கேற்றனர்.

ரவிராஜ் படுகொலை வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் சிங்கள ஜூரிகளால் விடுவிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும், ஏழு பேர் கொண்ட சிங்க ஜூரிகள் சபை சிறிலங்கா நேரப்படி  இன்று சனிக்கிழமை அதிகாலை விடுதலை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.