மேலும்

சிறிலங்காவில் மதிப்புக்கூட்டு வரி 15 வீதமாக அதிகரிக்கிறது

sri-lanka-emblemசிறிலங்காவில் மதிப்புக்கூட்டு வரி (வற் வரி) அடுத்த மாதம் 02ஆம் நாள் தொடக்கம் 15 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. சிறிலங்கா நிதி அமைச்சு இன்று இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அத்துடன், தொலைத்தொடர்பு சேவைகள், தொலைத் தோடர்புத்துறை கருவிகள் மற்றும் இயந்திரங்களின் இறக்குமதி மற்றும் விநியொகம், தொலைத்தொடர்புத்துறைக்கான உயர்வலுக் கருவிகள், சுகாதார சேவைகளுக்கும் இனிமேல் மதிப்புக்கூட்டு வரி அறவிடப்படும் என்றும் சிறிலங்கா நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *