மேலும்

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பயணம் – இன்னமும் முடிவு இல்லை

Zeid Raad Al Husseinஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் சிறிலங்கா பயணம் குறித்த காலஅட்டவணை இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இந்த ஆண்டு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

இந்தப் பயணம், வரும் மார்ச் மாதத்துக்குள் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

எனினும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் சிறிலங்காவுக்கான பயண நாள் தொடர்பாக இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ரவினா சம்தாசனி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *