மேலும்

Tag Archives: ஐ.நா

செம்மணி கூட்டுப் புதைகுழிகள் – அனைத்துலக தரத்துடன் விசாரணை நடத்த வேண்டும்

செம்மணி கூட்டுப் புதைகுழிகள் குறித்து அனைத்துலகத் தரத்திற்கு இணங்க, நம்பகமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சிறிலங்காவிடம் பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

அனைத்துலக விசாரணைப் பொறிமுறை கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி

தமிழினப் படுகொலைகள் தொடர்பாக அனைத்துலக நீதி விசாரணைப் பொறிமுறையொன்றை தாமதமின்றி உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பேரவையினால் பேரணி நடத்தப்பட்டுள்ளது.

நீர்த்துப்போன ஐ.நா அறிக்கை – குற்றம்சாட்டும் சிவில் சமூகம்

இரு பத்தாண்டு கால உள்நாட்டுப் போர் முடிந்து 17 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் வருடாந்த அறிக்கை, நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய ஒற்றுமையை வளர்க்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

புதைகுழி அகழ்வுக்கு வெளியக நிபுணர்களை பெறுவது குறித்து இதுவரை ஆலோசிக்கவில்லை

செம்மணிப் புதைகுழி அகழ்வில், வெளியக  தடயவியல் மற்றும் தொழில்நுட்ப உதவியை நாடுவது குறித்த ஐ.நா பரிந்துரையை பரிசீலித்து வருவதாக காணாமல் போனோருக்கான பணியகம் தெரிவித்துள்ளது.

அதிகாரப்பகிர்வு, பொறுப்புக்கூறல், சிறப்பு நீதிப்பொறிமுறையை வலியுறுத்தும் ஐ.நா அறிக்கை

அதிகாரப்பகிர்வு, நம்பகமான பொறுப்புக்கூறல் கட்டமைப்பு, சுதந்திரமான சிறப்பு சட்டவாளருடன் கூடிய சிறப்பு நீதிப் பொறிமுறை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் இணைய வேண்டும் என சிறிலங்காவிடம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா நல்லிணக்க, பொறுப்புக்கூறல் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும்- ஐ.நா

மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் குணப்படுத்துதலை முன்னெடுக்கவும் சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் அழைப்பு விடுத்துள்ளது.

ஈரானியக் கப்பல்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடவில்லை

சிறிலங்காவின் கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டுள்ள ஈரான் கொடி ஏற்றப்பட்ட  கப்பல்களை சிறிலங்கா அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் சமிந்த வலகுலுகே தெரிவித்துள்ளார்.

ஐ.நா பொதுச்சபை அமர்வில் சிறிலங்கா அதிபர் பங்கேற்கமாட்டார்

அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா பொதுச்சபையின்  81வது உயர்மட்டப் பொது அமர்வில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க பங்கேற்கமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா சிறப்பு அறிக்கையாளருக்கு வெளிவிவகார அமைச்சு பதிலளிக்கும்

22வது அரசியலமைப்பு திருத்த வரைவு தொடர்பாக, நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுநர்களின் சுதந்திரம் குறித்த, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்வைட் எழுப்பிய கவலைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்கும் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  தெரிவித்தார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு – ஐ.நாவிடம் முறையிட்ட பீரிஸ் குழு

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களின்  வெற்றிடங்களை நிரப்புவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து ஐ.நாவிடம், மக்கள் கூட்டு எதிர்க்கட்சி முறையிட்டுள்ளது.