மேலும்

12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை சிறிலங்கவில் அறிமுகம்

sri-lanka-emblemசிறிலங்காவில் நேற்று தொடக்கம் 12 இலக்கங்களைக் கொண்ட தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருவதாக, ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆர்.என்.ரத்நாயக்க தெரிவித்தார்.

அடையாள அட்டை விநியோகம் தொடர்பான சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலேயே, 12 இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சிறிலங்காவில் 9 இலக்கங்களையும், ஆங்கில எழுத்தையும் கொண்ட  அடையாள அட்டைகளே விநியோகிக்கப்பட்டு வந்தது.

12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

16 வயதை பூர்த்தி செய்துள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் ஆட்பதிவு திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இதுவரையில் 9 இலக்கங்களும், ஆங்கில எழுத்தும் கொண்ட அடையாள அட்டைகள் விநியோகிகப்பட்டு வந்தன.

இந்தஇலக்கங்கள், நான்கு பகுதிகளாக பிரிக்கப்படும். இதன்படி முதல் பாகத்தில் உள்ள இரண்டு எண்கள், பிறந்த ஆண்டை குறிக்கும்.

இரண்டாம் பகுதியில் உள்ள 3 இலக்கங்கள் குறித்த நபர் பிறந்த ஆண்டின் ஜனவரி மாதம் 1ஆம் நாள் முதல், அவரது பிறந்த நாள் வரையில் உள்ள நாட்களின் எண்ணிக்கையை குறிக்கும்.

மூன்றாம் பகுதியில் உள்ள 3 இலக்கங்கள் பால்நிலை குறித்த தகவலை கொண்டிருக்கும்.

இந்த நடைமுறை பின்பற்றப்படும் போது, 1916ஆம் ஆண்டு பிறந்த ஒருவருக்கும், 2016ஆம் ஆண்டு பிறந்த ஒருவருக்கும் ஒரே இலக்கத்தைக் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும் நிலை காணப்படுகிறது.

இதனை தவிர்ப்பதற்காகவே 12 இலக்கங்களை கொண்ட அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 12 இலக்க  அடையாள அட்டையில் ஆங்கில எழுத்து நீக்கப்படுகிறது.

அதேவேளை, முதல் நான்கு இலக்கங்களும் பிறந்த ஆண்டைக் குறிக்கும் வகையில் அமைந்திருக்கும்.

புதிய இலக்கங்களைக் கொண்ட அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளும் வரையில், தற்போதுள்ள அடையாள அட்டை செல்லுபடியாகும் என்றும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *