மேலும்

மாதம்: March 2015

நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டங்களைத் தொடர சீன நிறுவனங்களுக்கு சிறிலங்கா அனுமதி

சீனாவுடன் இணைந்து வீதி அபிவிருத்தித் திட்டங்களை மீளவும் ஆரம்பிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, சிறிலங்கா அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து திரும்பும் மைத்திரி – அடுத்து பாகிஸ்தான் பயணம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏப்ரல் மாத முற்பகுதியில் பாகிஸ்தானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்புத் துறைமுகத்தில் மூன்று ரஸ்யக் கடற்படைக் கப்பல்கள்

ரஸ்யக் கடற்படையின் பசுபிக் கப்பல் படைப்பிரிவைச் சேர்ந்த மூன்று போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன. அட்மிரல் பன்ரெலீவ், பெசெங்கா, எஸ்.பி-522 ஆகிய கப்பல்களே, கடந்த 28ம் நாள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன.

ஒபாமாவினால் கௌரவிக்கப்படவுள்ள இலங்கைத் தமிழ் விஞ்ஞானி

விஞ்ஞான, கணித, மற்றும் பொறியியல் வழிகாட்டுதலுக்கான சாதனையாளர்களுக்கான அமெரிக்க அதிபர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள, இலங்கைத் தமிழரான விஞ்ஞானி உள்ளிட்ட 14 பேர் அமெரிக்க அதிபர் ஒபாமாவினால் கெளரவிக்கப்படவுள்ளனர்.

சரத் பொன்சேகாவுக்கு இணையான பதவி கிடைப்பதை தடுக்கச் சதி – முன்னாள் விமானப்படைத் தளபதி

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இணையான, மார்ஷல் ஒவ் த எயார் பதவி, தனக்குக் கிடைப்பதை தடுப்பதற்கு சதி இடம்பெறுவதாக தாம் சந்தேகிப்பதாக சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் ரொஷான் குணதிலக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு எதிராக சிறிலங்காவுடன் கைகோர்க்கும் இந்தியா

சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ புலனாய்வு அமைப்பின் தலையீடுகள் தொடர்பாக, சிறிலங்காவின் புலனாய்வு அமைப்புகளுடன் இந்தியப் புலனாய்வு அமைப்புகள், பேச்சுக்களை நடத்தவுள்ளன.

சிறிலங்கா படைகளிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் – சில தரவுகள்

நான்காவது கட்ட ஈழப்போரின் முடிவில், சரணடைந்த 12,346 விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளில், 6 தொடக்கம் 7 வீதம் வரையிலானோர், கரும்புலிகள் அணியில் இருந்தவர்கள் என்று, சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக தெரிவித்துள்ளார்.

சம்பூரில் ஏப்ரல் இறுதிக்குள் 579 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படுவர் – ஒஸ்ரின் பெர்னான்டோ

திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூரில், இருந்து இடம்பெயர்ந்த 579 குடும்பங்கள், ஏப்ரல் மாத இறுதிக்குள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியர்த்தப்படுவர் என்று கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

மீண்டும் அரசியலுக்கு வருவாரா மகிந்த ராஜபக்ச? – கேணல் ஹரிகரன்

மகிந்த ராஜபக்சவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக சுமத்தப்படும் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் நிரூபிக்கப்படாவிட்டால், ராஜபக்சவை ஆதரிக்கும் 5.8 மில்லியன் வாக்காளர்களும் அவரை ஒரு அதிகாரத்துவ ஆட்சியாளராக நோக்குவதை விட, ஒரு அரசியல் தியாகியாகவே கருதுவார்கள்.

மீனவர்களின் விவகாரம்: வியாழனன்று சிறிலங்கா அதிபர் முக்கிய சந்திப்பு

இந்திய – சிறிலங்கா மீனவர்களுக்கு இடையில் மீன்பிடித்தல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு,  இந்திய மீனவர்களால் முன்வைக்கப்பட்ட திட்டம் தொடர்பாக, வடக்கிலுள்ள மீனவர் சங்கங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண மீன்பிடி அமைச்சர் ஆகியோருடன் சிறிலங்கா அதிபர் பேச்சு நடத்தவுள்ளார்.