மேலும்

ஒபாமாவினால் கௌரவிக்கப்படவுள்ள இலங்கைத் தமிழ் விஞ்ஞானி

Tilak Ratnanatherவிஞ்ஞான, கணித, மற்றும் பொறியியல் வழிகாட்டுதலுக்கான சாதனையாளர்களுக்கான அமெரிக்க அதிபர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள, இலங்கைத் தமிழரான விஞ்ஞானி உள்ளிட்ட 14 பேர் அமெரிக்க அதிபர் ஒபாமாவினால் கெளரவிக்கப்படவுள்ளனர்.

அமெரிக்க அதிபரினால் விருது அளிக்கப்படவுள்ள 14 பேரில், இலங்கைத் தமிழரான திலக் ரத்னநாதரும் ஒருவராவார்.

திலக் ரத்னநாதர், அமெரிக்காவின் மேரிலான்ட், ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக, உயிரிமருத்துவ பொறியியல் பீடத்தின், உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த ஆண்டு இறுதியில் வெள்ளை மாளிகையில் நடைபெறவுள்ள நிகழ்வில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவினால் இவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கல்வியாளர்கள் அமெரிக்காவின் எதிர்கால விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், கணிதவியலாளர்களை உருவாக்க உதவியுள்ளனர் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபரின் விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 14 பேரில், மூர்த்தி எஸ்.கம்பம்பட்டி என்ற இந்திய வம்சாவளி உயிரியல் பேராசிரியரும் அடங்கியுள்ளார்.

இவர்களுக்கு 10 ஆயிரம் டொலர் பணப்பரிசும், கௌரவ விருதும் அளிக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *