மேலும்

நாள்: 6th March 2015

சிறிலங்காவை உன்னிப்பாக கண்காணிப்போம் – சீனா

கொழும்புத் துறைமுக நகரத் திட்ட விவகாரத்தை சிறிலங்கா  பொருத்தமான முறையில் தீர்க்கும் என்று சீனா தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா எடுத்துள்ள முடிவு குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங், பீஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

மகிந்தவின் பாதுகாப்பு அணியில் இருந்து நீக்கப்பட்டார் மகன் யோசித

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இருந்து, அவரது மகனான லெப்.யோசித ராஜபக்ச நீக்கப்பட்டு, சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஜெயகுமாரி விடுதலைக்கு முட்டுக்கட்டை போடும் சட்டமாஅதிபர் திணைக்களம்

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு ஆண்டாக தடுத்து வைக்கப்பட்டுள்ள, பாலேந்திரன் ஜெயகுமாரியைப் பிணையில் விடுவிப்பதற்கு, சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களம் இழுத்தடிப்புச் செய்து வருகிறது.

இந்தியப் பிரதமரின் சிறிலங்கா பயணத் திட்டம் வெளியானது – இரண்டு நாட்களே தங்கியிருப்பார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 13ம் நாள் தொடக்கம், 14ம் நாள் வரை சிறிலங்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகாரச் செயலர் ஜெய்சங்கருடன் சிறிலங்கா பயணத்தை ஆரம்பித்தார் சுஸ்மா

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சிறிலங்காவுக்கான இரண்டு நாள் பயணத்தை இன்று பிற்பகல் ஆரம்பித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன்  தெரிவித்துள்ளார்.

மைத்திரி ஆட்சியிலும் பயங்கரவாத தடைச்சட்டம் – பகீரதி மீது பாய்ந்தது

பிரான்சில் இருந்து வந்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட, முருகேசு பகீரதி என்ற பெண்ணை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு தடுத்து வைத்திருப்பதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

17 பேர் கொண்ட குழுவுடன் நாளை பிரித்தானியா செல்கிறார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை பிரித்தானியாவுக்கான ஐந்து நாள் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார். அவருடன் 17 பேர் கொண்ட குழுவொன்றும் லண்டன் செல்லவுள்ளது.

இன்று கொழும்பு வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இரண்டுநாள் பயணமாக இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மீண்டும் தவறு இழைக்கக் கூடாது – சிறிலங்காவுக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை

சிறிலங்கா அரசாங்கத்தினால் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் மீண்டும் இடம்பெறக் கூடாது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் எச்சரித்துள்ளார்.