கொழும்புத் துறைமுகத்தில் மூன்று ரஸ்யக் கடற்படைக் கப்பல்கள்
ரஸ்யக் கடற்படையின் பசுபிக் கப்பல் படைப்பிரிவைச் சேர்ந்த மூன்று போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன. அட்மிரல் பன்ரெலீவ், பெசெங்கா, எஸ்.பி-522 ஆகிய கப்பல்களே, கடந்த 28ம் நாள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன.
மாலுமிகள் ஓய்வெடுப்பதற்காகவும், விநியோகத் தேவைகளுக்காகவுமே, இவை கொழும்பு வந்துள்ளதாக, சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பல்கள் வரும் ஏப்ரல் 1ம் நாள் வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திருக்கோணமலைத் துறைமுகத்தில் இந்தியக் கடற்படையின் நான்கு கப்பல்கள் தரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.