மேலும்

சரத் பொன்சேகாவுக்கு இணையான பதவி கிடைப்பதை தடுக்கச் சதி – முன்னாள் விமானப்படைத் தளபதி

roshan gunathilakeபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இணையான, மார்ஷல் ஒவ் த எயார் பதவி, தனக்குக் கிடைப்பதை தடுப்பதற்கு சதி இடம்பெறுவதாக தாம் சந்தேகிப்பதாக சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் ரொஷான் குணதிலக தெரிவித்துள்ளார்.

மிக் விமானக் கொள்வனவு ஊழல் விவகாரத்தில், தமது பெயரைச் சம்பந்தப்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு தற்பாதைய அரசாங்கம் பீல்ட் மார்ஷல் பதவியை வழங்கியதையடுத்து, போர் வெற்றி கொள்ளப்பட்ட போது விமானப்படைத் தளபதியாக இருந்த என்னை மார்ஷல் ஒவ் த எயார் பதவிக்கும், கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரன்னகொடவை, அட்மிரல் ஒவ் த பிளீட் பதவிக்கும் உயர்த்த வேண்டும் என்றும் பல்வேறு மட்டங்களில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் தற்போது, திடீரென சர்ச்சைக்குரிய மிக் விமானக் கொள்வனவு விவகாரத்தில் எனது பெயரைத் தொடர்புபடுத்தி பரப்புரை செய்யப்படுகிறது.

உண்மையில் மிக்-27 போர் விமானக் கொள்வனவில் எந்த சர்ச்சையும் இல்லை.

நான் விமானப்படைத் தளபதியாக இருந்த போது, நான்கு மிக் -27 போர் விமானங்கள் உக்ரேனிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டன.

அந்த விமானக் கொள்வனவு விமானப்படை ஒப்புதல் அளித்து இடம்பெறவில்லை. அது அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டு செய்யப்பட்ட விமானக் கொள்வனவாகும்.

2006ம் ஆண்டில் இருந்தே மிக் போர் விமானங்களைக் கொள்வனவு செய்ய வேண்டிய தேவை இருந்தது.  ஆனால், நான் பதவியேற்ற பின்னரே, அந்தக் கொள்வனவு இடம்பெற்றது.

போர் விமானங்களை ஒரு பொருளை கடையில் போய் வாங்குவது போல கொள்வனவு செய்ய முடியாது. எமக்கு அமைச்சரவை அனுமதி அவசியம். அமைச்சரவையின் ஒப்புதல் எமக்கு அளிக்கப்பட்டது.

அண்மையில் இதுகுறித்து சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு நிதி மோசடித் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் என்னிடம் விசாரித்தனர்.

அப்போது விமானப்படைத் தளபதி என்ற வகையில், நான் வாக்குமூலம் அளித்தேன்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *