மேலும்

நாள்: 16th March 2015

திருமலையை இந்தியாவுக்கு வழங்கியதால் பயங்கர விளைவுகள் ஏற்படும் – எச்சரிக்கிறார் திஸ்ஸ விதாரண

திருகோணமலையை இந்தியாவுக்கு வழங்கியமை எதிர்காலத்தில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்த வழிவகுக்கும் என்று முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாசக் கட்சித் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண எச்சரித்துள்ளார்.

அத்துமீறும் எவர் மீதும் சுடும் அதிகாரம் கடற்படைக்கு உள்ளது – மீண்டும் சர்ச்சையைக் கிளப்புகிறார் ரணில்

சிறிலங்காவின் கடற்பரப்புக்குள் அத்துமீறும், இந்திய மீனவர்களைச் சுடும் உரிமை சிறிலங்காவுக்கு உள்ளது என்று, மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

சிறிலங்காவில் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மனிதனின் பற்களின் படிமங்கள் கண்டுபிடிப்பு

சிறிலங்காவில் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஈர வலயக் காடுகளில் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காணும் திட்டம் இல்லை – சிறிலங்கா அமைச்சர் கூறுகிறார்

அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு காணும் எண்ணம், ஏதும், சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்துக்குக் கிடையாது என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடிக்காக மீறப்பட்ட சிறிலங்காவின் இராஜதந்திர மரபுகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இராஜதந்திர மரபுகளை மீறிச் செயற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் தலையீடுகளை சகித்துக் கொள்ள முடியாது – முன்னாள் அமைச்சர் கூறுகிறார்

இந்திய ஆதிக்க விரிவாக்கத்தை எதிர்த்தமையே முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதற்கான காரணம் என்று, முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும், அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மோடியின் ஆலோசனை சிறிலங்காவுக்குப் புரிந்திருக்கும் – வெங்கய்ய நாயுடு நம்பிக்கை

13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், அதற்கு அப்பால் சென்று தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய ஆலோசனையை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் ஏற்றுச் செயற்படும் என்று இந்தியாவின் மத்திய இணைஅமைச்சர் வெங்கய்ய நாயுடு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அனைத்துலக விசாரணைக்கு எதிராக சிறிலங்கா முழுவதும் ஒன்றுபட்டு நிற்கிறதாம் – சந்திரிகா கூறுகிறார்

சிறிலங்காவில் 26 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போரில், இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த அனைத்துலக விசாரணைகளுக்கு எதிராக, சிறிலங்கா முழுவதும் ஒன்றுபட்டு நிற்பதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.

ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய சிறிலங்காவின் முன்னாள் கடற்படை அதிகாரி கைது

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கொழும்பில் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற உயர்அதிகாரி ஒருவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

19வது அரசியலமைப்பு திருத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் – அதிபரின் அதிகாரங்கள் குறையும்

சிறிலங்கா அதிபரின் நிறைவேற்று அதிகாரங்கள் பலவற்றைக் குறைக்கவும், தேர்தல் முறைமையில் மாற்றங்களைக் கொண்டு வரவும், வழி செய்யும் 19ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனைக்கு சிறிலங்காவின் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.