ஹெய்டியில் சிறிலங்கா படைகள் நிறுத்தப்படுவதை எதிர்க்கும் மனித உரிமை அமைப்புகள்
தண்டிக்கப்படாத பாலியல் துஷ்பிரயோகத்தைக் காரணம் காட்டி, ஹெய்டியில் சிறிலங்காப் படைகளை நிலைநிறுத்துவதை நிறுத்துமாறு மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
தண்டிக்கப்படாத பாலியல் துஷ்பிரயோகத்தைக் காரணம் காட்டி, ஹெய்டியில் சிறிலங்காப் படைகளை நிலைநிறுத்துவதை நிறுத்துமாறு மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 1,132 பேர் கொண்ட படைப்பிரிவு ஒன்று, ஹெய்டியில் ஐ.நாவின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்படவுள்ளது.
ஹெய்டியில் நிறுத்தப்படும் ஐ.நாவின் கும்பல் அடக்கும் படைப்பிரிவில் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையை சேர்ந்த 900 பேரை இணைத்துக் கொள்வதற்கு ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கை திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெய்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவ வீரர் எவ்வித பாலியல் வன்புணர்வுச் சம்பவத்திலும் ஈடுபடவில்லை என தனது தாயார் வீட்டின் தோட்டத்தில் கதிரை ஒன்றில் அமர்ந்தவாறு மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் உறுதிபடத் தெரிவித்தார்.
ஐ.நா அமைதி காக்கும் படையில் அங்கம் வகித்த சிறிலங்கா இராணுவ வீரர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹெய்ற்றியில் எவ்வாறு பாலியல் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தனர் என்பது தொடர்பான அதிர்ச்சியான ஒரு பதிவை The Associated Press ஊடகம் அண்மையில் வெளியிட்டிருந்தது.
ஐ.நா அமைதிப்படைக்கு தமது படையினரை அனுப்பும் உறுப்பு நாடுகள், ஐ.நா அமைதிப்படைக்கு தமது வீரர்களை அனுப்பும் போது, அவர்கள் எந்த பாலியல் துஷ்பிரயோகத்திலும் தொடர்புபடவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.
ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறிலங்கா படையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பாதுகாப்பாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று அசோசியேட்டட் பிரஸ் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.