மேலும்

பிரிவு: செய்திகள்

பௌத்த பிக்குகளுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது – மல்வத்த அனுநாயக்கர்

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பௌத்த பிக்குகள் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று மல்வத்த பீடத்தின் அனுநாயக்க தேரர் வண. திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.

எம்.பிக்களைக் கைது செய்வதற்கா அரசு  ஆணை பெற்றது?- சரத் பொன்சேகா

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்வதற்கான மக்களை ஆணையை, அதிபர் தேர்தலில் அரசாங்கம் பெற்றிருக்கிறதா என்று, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா படையினர் கூட்டாக தேடுதல்

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர், காவல்துறையினர்,  சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து நேற்று கூட்டு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

எம்சிசி, சோபா, அக்சா உடன்பாடுகளை ரத்துச் செய்வதற்கு சஜித் ஆதரவு

தற்போதைய அரசாங்கத்துக்கு சிறிலங்கா மக்கள் வழங்கியுள்ள ஆணைக்கு அமைய, எம்சிசி, அக்சா, சோபா உள்ளிட்ட எல்லா அனைத்துலக உடன்பாடுகளும், நீக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எம்சிசி மீளாய்வுக் குழு தலைவருக்கே தெரியாத ஆணை

மிலேனியம் சவால் நிறுவன (எம்.சி.சி) உடன்பாட்டை, மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவுக்கு,  அதன் நோக்கம் மற்றும் அதன் ஆணையின் காலஎல்லை குறித்து இன்னமும் தெரிவிக்கப்படவில்லை, என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் சிறிலங்கா படைகளை ஈடுபடுத்தும் அரசிதழ் அறிவிப்பு வெளியீடு

பொது ஒழுங்கை பராமரிப்பதற்காக, அனைத்து ஆயுதப்படையினரையும் ஈடுபடுத்தும் வகையில், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச சிறப்பு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எக்னெலிகொட கடத்தலுக்கு சம்பிக்கவே பொறுப்பு – குற்றம்சாட்டுகிறார் மேஜர் அஜித்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவத்துக்கு முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவே பொறுப்பு என, பதில் காவல்துறை மா அதிபரிடம் தாம் கடந்த 21ஆம் நாள் முறைப்பாடு செய்திருப்பதாக, சட்டவாளரும், முன்னாள் இராணுவ அதிகாரியுமான மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

மதம் பிடித்த பிராந்தியங்கள் -8

சர்வதேச அரங்கிலே அரசியல் மாற்றங்கள் பல்வேறு கோணங்களில் நிகழ்வது போல் தென்படுவதாக இருந்தாலும், அனைத்து நகர்வுகளும் மேலைத்தேய முதலாளித்துவ ஜனநாயக நலன்களை பாதுகாக்கும் வகையிலேயே இடம் பெற்று வருகிறது என்பதை, இந்த இறுதி எட்டாவது கட்டுரை பிரதிபலித்து நிற்கிறது.

அமெரிக்க – இந்தியா உயர்மட்டப் பேச்சில் சிறிலங்கா குறித்தும் கவனம்

வொசிங்டனில் கடந்த வாரம், அமெரிக்க- இந்திய உயர் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தைகளில், சிறிலங்கா விவகாரம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

5 ஆண்டுகளுக்குப் பின் அலரி மாளிகையை தேடிச் சென்ற மைத்திரி

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஆகியோருடன் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தனித்தனியாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.