மேலும்

பிரிவு: செய்திகள்

19வது அரசியலமைப்புத் திருத்த வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

சிறிலங்கா அரசியலமைப்பின் 19வது திருத்த யோசனை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் 19வது அரசியலமைப்புத் திருத்தப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

சீன – சிறிலங்கா அதிபர்கள் பேச்சில் துறைமுக நகர விவகாரத்துக்கு முக்கிய இடம்

சிறிலங்கா அதிபருக்கும், சீன அதிபருக்கும் இடையிலான பேச்சுக்களின் போது, கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் குறித்து கலந்துரையாடப்படும் என்று, சிறிலங்காவுக்கான சீனாவின் சிறப்புத் தூதுவர் லியூ ஜியான்சோ தெரிவித்துள்ளார்.

ஜெனரல் ஜெயசூரியவுடன் கைகுலுக்க மறுத்த பீல்ட் மார்ஷல் பொன்சேகா

சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியாக உள்ள ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுடன், கைகுலுக்க பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மறுப்புத் தெரிவித்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சீனாவுடன் சுமுக உறவை விரும்புகிறார் சிறிலங்கா அதிபர் – ஏஎவ்பி ஆய்வு

இவ்வாரம் சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள சிறிலங்காவின் புதிய அதிபர் சீனத் தலைமையைச் சந்தித்து சிறிலங்காவில் தடைப்பட்ட சீனாவின் திட்டங்கள் தொடர்பில் சுமூகமான பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

மகிந்த குடும்பத்தின் முக்கிய நபர் காணாமற்போனார்

ரஸ்யாவில் சிறிலங்கா தூதுவராக இருந்தவரும், சிறிலங்கா தூதரகம் அருகே தேனீர் வியாபாரம் செய்து வந்தவருமான, மகிந்த ராஜபக்சவின் மருமகனான உதயங்க வீரதுங்கவைக் காணவில்லை என்று, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 23இற்குப் பின்னர் திட்டமிட்டபடி நாடாளுமன்றத் தேர்தல் – ரவி கருணாநாயக்க

தேசிய ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத் தேர்தல் பிற்போடப்படாது என்றும், திட்டமிட்டபடி, ஏப்ரல் 23ம் நாளுக்குப் பின்னர் நடத்தப்படும் என்றும், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவேன் – மகிந்த ராஜபக்ச

தாம் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதானால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியில் மட்டுமே போட்டியிடுவேன் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் 8 மாவட்டங்களிலும் போராட்டம்

சிறிலங்காவில் காணாமற்போனோர் தொடர்பாக மேற்கொள்ளப்படும் உள்நாட்டு விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும், இன்று வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

உயர்பாதுகாப்பு வலயக் காணிகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் – வளலாயில் மைத்திரி உறுதி

வடக்கிலுள்ள மக்களின் காணிப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும், உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

மட்டக்களப்பில் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், புதினப்பலகை ஆசிரியருமான மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு, நகர பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.