மேலும்

பிரிவு: செய்திகள்

வரும் 14ஆம் நாள் இந்தியா செல்கிறார் ரணில் – முக்கிய விவகாரங்கள் குறித்து பேசுவார்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் 14ஆம் நாள் தொடக்கம் 16ஆம் நாள் வரை இந்தியாவுக்கு, தனது முதல் அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 அமைச்சர்கள், 45 பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் செவ்வாயன்று பதவியேற்பு

சிறிலங்காவின் தேசிய அரசாங்கத்தில் மேலும் 5 அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இவர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுடன் இணைந்து வரும் செவ்வாய்க்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா அறிக்கை கிடைக்க முன்னரே பதிலளிக்கும் குழுக்களைத் தயார்படுத்தியது சிறிலங்கா

சிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை இன்னமும், அரசாங்கத்துக்குக் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தொடர்பாக பொது நிலைப்பாடு – உடன்பாட்டில் கையெழுத்திடவும் ஐதேக, சுதந்திரக் கட்சி முடிவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவை விவகாரங்கள் தொடர்பாக, தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஐதேகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுவான இணக்கப்பாடு ஒன்றை எட்டவுள்ளதுடன் இதுபற்றிய புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றையும் செய்து கொள்ளவுள்ளன.

வரும் 15ஆம் நாள் புதுடெல்லி செல்கிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 15ஆம் நாள் புதுடெல்லிக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த பிரதமராகியிருந்தால் பெருமளவு கொலைகள் நிகழ்ந்திருக்கும் – சந்திரிகா

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச பிரதமராக அதிகாரத்துக்கு வந்திருப்பாரேயானால், சிறிலங்காவில் பாரியளவில் அப்பாவிகள் கொலை செய்யப்பட்டிருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.

சிறிலங்காவில் இனி என்ன?

ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் இனிவருங் காலங்களில் எவ்வாறு தொடரப்படும்? தமிழர் பிரச்சினைகள் தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் இருக்குமா? ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள கூட்டத் தொடரில் கொழும்பில் மூலோபாயம் என்ன?

தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுடன் ரணில் சந்திப்பு

தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுக்களை நடத்தியிருக்கிறார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன.

தேசிய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு விரைவான தீர்வைத் தரவேண்டும் – சுமந்திரன்

தேசிய அரசாங்கத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

நாடாளுமன்றத்தில் பிரேரணையை ஆதரிக்காத சுதந்திரக் கட்சியினர் மீது நடவடிக்கை இல்லையாம்

தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி0 கோரி கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காத, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று தெரிவித்துள்ளார் அந்தக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க.