தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுடன் ரணில் சந்திப்பு
தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுக்களை நடத்தியிருக்கிறார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன.
சீனாவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு, தென்னாபிரிக்க அதிபர் நாடு திரும்பும் வழியிலேயே, இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் நிரப்புவதற்காக தென்னாபிரிக்க அதிபரின் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்த போதே, ரணில் விக்கிரமசிங்க அங்கு சென்று தென்னாபிரிக்க அதிபரை சந்தித்தார்.
இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னாபிரிக்க அதிபர் சீனா செல்லும் போது. கட்டுநாயக்கவில் தரையிறங்கிய போது, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவரைச் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.