மேலும்

பிரிவு: செய்திகள்

சீன நிறுவனங்கள் மோசடிகளில் ஈடுபடுகின்றன- சிறிலங்கா குற்றச்சாட்டு

சீனாவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளும் சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்காவின் முன்னாள் அதிபரால் கைச்சாத்திடப்பட்ட 5.3 பில்லியன் டொலர் பெறுமதியான திட்டங்கள் தொடர்பில் சமரசப் பேச்சுக்களை நடத்துவார் என்று  நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க  தெரிவித்துள்ளார்.

மாநிலஅரசு பரிந்துரை செய்தால் இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை – இந்திய அமைச்சர் தெரிவிப்பு

தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கம் பரிந்துரை செய்தால், அதுகுறித்து இந்திய மத்திய அரசாங்கம் பரிசீலனை செய்யும் என இந்திய மத்திய அமைச்சர் கிரென் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார். 

கோத்தாவிடம் 2 பில்லியன் ரூபா மானநட்டம் கோருகிறார் ரவி கருணாநாயக்க

தனக்கெதிராக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட ‘பொய்யான குற்றச்சாட்டு’ தொடர்பில் நட்டஈடாக இரண்டு பில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக சிறிலங்காவின் தற்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மகிந்தவின் தோல்வி தெற்காசியாவின் வியத்தகு மாற்றம் – என்கிறது அமெரிக்கா

சிறிலங்காவில் அண்மையில் நடந்த தேர்தலில் சக்திவாய்ந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டமை, தெற்காசியாவில் வியத்தகு களத்தை திறந்து விட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஒற்றையாட்சி முறையில் தமிழ்மக்களுக்கு விமோசனம் கிடைக்காது – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

ஒற்றையாட்சி முறையினால் தமிழ்மக்களுக்கு விமோசனம் கிடைக்காது என்றும், அது நீக்கப்பட்டு கூட்டாட்சி முறை கொண்டு வரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்  வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்.

காங்கேசன்துறையில் அனைத்துலக உறவுகளுக்கான நிலையம் – கட்டுமானப்பணிகளை தொடர அனுமதி

காங்கேசன்துறையில் கட்டப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய அதிபர் மாளிகையின் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள, சிறிலங்கா அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அமைச்சர்கள் பட்டாளத்துடன் இன்று சீனா செல்கிறார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் பயணமான இன்று சீனாவுக்குச் செல்லவுள்ளார். இன்றிரவு பீஜிங்கை சென்றடையும் அவருக்கு, நாளை சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கெகியாங் ஆகியோர் அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கவுள்ளனர்.

உள்ளூராட்சி சபைகளின் ஆயுள்காலம் 3 மாதங்களுக்கு நீடிப்பு

சிறிலங்காவின் 234 உள்ளூராட்சி சபைகளினது ஆயுள்காலத்தை, மூன்று மாதங்களுக்கு நீடிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தனுக்கு கிடைக்குமா எதிர்க்கட்சித் தலைவர் பதவி? – சபாநாயகருக்கு முடிவெடுக்கும் அதிகாரம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பாக, சபாநாயகர் சமல் ராஜபக்சவே தீர்மானிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் கடன் விதிமுறைகளை மீளாய்வு செய்ய முடியாது – சீனா உறுதி

சிறிலங்காவுடன் செய்து கொள்ளப்பட்ட கடன் உடன்பாடுகளின் விதிமுறைகளை மீளாய்வு செய்யத் தயாராக இல்லை என்று சீனா தெரிவித்துள்ளது.