மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

இந்தியாவை கட்டுப்படுத்தவே சிறிலங்காவில் முதலீடு செய்கிறது சீனா – இந்திய விமானப்படைத் தளபதி

சிறிலங்காவிலும், ஏனைய தெற்காசிய நாடுகளிலும், சீனா மேற்கொள்ளும் முதலீடுகள், இந்தியாவைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான மூலோபாய நகர்வுகள் என்று இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் அரூப் ராஹா தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் – பதில் கூறாமல் நழுவினார் ஐ.நா பொதுச்செயலர்

தமிழ் மக்களுக்கு எதிராக போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது என நினைக்கிறீர்களா என்று இந்திய ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு, நேரடியாகப் பதிலளிக்காமல் நழுவியுள்ளார் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன்.

சிறிலங்காவுக்கு போர் விமானங்களை விற்க இந்தியா முயற்சி – உறுதிப்படுத்துகிறது இந்திய ஊடகம்

சிறிலங்கா விமானப்படைக்கு, போர் விமானங்களை வழங்குவதற்கு இந்தியாவும், சீனாவும் முன்வந்திருக்கின்றன என்பதை சுயாதீனமான வட்டாரங்கள் உறுதி செய்திருப்பதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி எடுத்த முடிவே அவரைப் பலியெடுத்தது – உத்தரப் பிரதேச மாநில ஆளுனர் ராம் நாயக்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, சிறிலங்காவுக்கு இந்திய அமைதிப்படையை அனுப்புவதற்கு அவர் எடுத்த முடிவினால் தான், உயிரை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில ஆளுனர் ராம் நாயக் தெரிவித்துள்ளார்.

மன்னார் கடற்படுகையில் எண்ணெய் அகழ்வுப் பணிகளில் இருந்து வெளியேறுகிறது இந்திய நிறுவனம்

மன்னார் கடற்படுகையில், எண்ணெய் அகழ்வு முயற்சியில் ஈடுபட்டிருந்த கெய்ன் இந்தியா நிறுவனம், சிறிலங்காவில் இருந்து வெளியேறவுள்ளது.

நிறைவுக்கு வந்தது புனேயில் நடந்த இந்திய – சிறிலங்கா படைகளின் 14 நாள் கூட்டுப் பயிற்சி

இந்திய – சிறிலங்கா படைகளுக்கு இடையில், ‘மித்ரசக்தி -2015 ‘ என்ற பெயரில் புனேயில் உள்ள இந்திய இராணுவத் தளத்தில் இரண்டு வாரங்களாக நடத்தப்பட்டு வந்த கூட்டு இராணுவப் பயிற்சி நேற்று நிறைவுக்கு வந்துள்ளது.

வீடமைப்பு உதவிக்கு பாலியல் இலஞ்சம் கோரிய விவகாரம் – கடும் கோபத்தில் புதுடெல்லி

முழங்காவில் பகுதியில் இந்திய வீடமைப்புத் திட்ட உதவியைப் பெறுவதற்கு, பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரப்படுவதாக செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள், புதுடெல்லிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், இதுகுறித்து சிறிலங்காவுக்கு கடும் அழுத்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

அனல்மின் நிலைய திட்டம் சம்பூரில் இருந்து பவுல் பொயின்ற் பகுதிக்கு மாற்றம்?

திருகோணமலை, சம்பூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள அனல் மின் நிலையத்தை, திருகோணமலை துறைமுக நுழைவாயில் பகுதியான பவுல் பொயின்ற் பகுதிக்கு மாற்றுமாறு இந்தியாவிடம், சிறிலங்கா கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களிக்கும் – கல்கத்தா ரெலிகிராப் தகவல்

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணைகளை நடத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா தீர்மானித்துள்ளதாக கல்கத்தா ரெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய- சிறிலங்கா படைகளின் கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பம்

இந்திய- சிறிலங்கா படைகள் நடத்தும், மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சி நாளை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகருக்கு அண்மையில் உள்ள   அவுண்ட் இராணுவத் தளத்தில் ஆரம்பமாகவுள்ளது.